Wednesday, September 21, 2011

தெய்வம் ஏகரோ? திரியேகரோ? - கடைசிப் பகுதி

பிதா குமார பரிசுத்தாவி மூவரும் சேர்ந்து ஒரு தெய்வம் என்ற வாதத்திற்கு சாதகமாயிருக்கின்ற ஒரு வாக்கியமோ திரித்துவம் என்ற சொல்லுக்கு ஒரு வார்த்தையோ வேதபுத்தகத்திலில்லை. பிதாவினுடைய சர்வாதிகாரத்தை புறம் தள்ளுகிறதாகவோ அல்லது குமாரன் தான் பிதா என்று அறிவிக்கின்றதாகவோ உள்ள ஒரு புள்ளியோ ஒரு கமாவோ வேதபுத்தகத்திலில்லை.

கணித சாஸ்த்திரமனுசரித்து திரித்துவம் என்றால் 3 x 1 = 3, 1 = 3, 3 = 1 என்று வருகிறது. திரித்துவ சித்தாந்தத்தில் இருந்து உருவெடுத்த நிரூபணங்கள் பிதாவைப்போல் வயதுள்ள குமாரன். தெய்வத்தினுடைய ஒரு பாகம் மரித்துப்போனது, தெய்வத்தினுடைய ஒரு பாகம் தெய்வத்தோடு ஜெபிப்பது, பரீட்சைக்குட்பட்டது. பாடுகள் அனுபவித்து, கொஞ்ச நாளில் மரணமடைந்தது. ஒரு குமாரன் சொந்த பிதாவிற்கு உயிர் கொடுத்து, திரும்பவும் தெய்வமனிதன் என்ற ஒரு விசேஷப்பட்ட ஆன்மாவாயிருக்கின்ற தெய்வத்திற்கு (யோவா :4:24) பரிசுத்தாவி எங்கின்ற இரண்டாவது ஆத்தும ஜீவியுண்டு. பிதா குமார பரிசுத்தாவி ஒரு தெய்வம் ஆனாலும் மூன்று தெய்வங்கள்.

பொருளில்லாததும் துர்வியாக்கியானம் செய்ததும், பொய்யானதுமான திரித்துவ சித்தாந்தம் வார்த்தைகளுக்கும் மனதிற்கும் விஷயமாகதது. அது மர்ம பிரதானமானதினாலும் கேள்வி கேட்காமல் கண் மூடி விசுவாசிக்க வேண்டுமென்று இக்கூட்டத்தினர் சொல்லுகிறார்கள். ஆனால் வேதபுத்தகம் மர்மம் என்று சொல்லுவது இப்போது மறைந்திருக்கிறதும் அந்தந்த நேரத்தில் நிச்சயித்திருக்கின்ற ஆளுமைகளாக வெளிப்படுத்தி கொடுக்கின்றதுமான ரகசியங்களைக் குறித்துதான்.

திரித்துவ உபதேசம் கிறிஸ்தவ மதத்தில் சாத்தான் ஏன் கொண்டுவந்தான்?

சாத்தானுடைய ஏழு வித கெட்ட இலட்ச்சியங்களை சாதிப்பதற்காக இந்த திரித்துவத்தை கிறிஸ்தவ மதத்தில் நுழைத்தான்.

அவைகள்:

1) யெகோவாவினுடைய மகிமையை குறைத்து காட்டுவதற்காகவும், அவருக்கு கிடைக்க வேண்டிய உன்னதமான பதவியிலும், அன்பிலும் மாயம் சேர்ப்பதற்காக.

2) பிதாவும் இயேசுவும் ஒன்று தான் என்ற கொள்கை முகாந்திரம் பிதா பக்தனும் எளிமையுள்ளவருமான குமாரனுக்கு துக்கமும் அவமானமும் வருவதற்காக.

3) புத்தியீனமும் மதியற்றதும் என்று காட்டி தெய்வ நிச்சயத்தைக்குறித்து நம்மை இருட்டில் தள்ளுவதற்காக.

4) வேத புத்தகம் முறன்பாடுள்ளதும் பொய்களும் நிறைந்த ஒரு விஷப்புத்தகம் என்று காட்டுவதற்காக.

5) விவேகத்தோடும் ஞானத்தோடும் முழு மனதோடும் தெய்வத்தை ஆராதிப்பதற்கும் நினைப்பதற்கும் முடியாத விதத்தில் தெய்வ ஜனங்களுக்கு சிந்தனை குழப்பங்களை கொடுத்து இவர்களுடைய மனதினை நிர்விசாரமாக்குவதற்காக.

6) இந்த விசுவாசத்தில் அடிமைகளானவர்களை மதபுரோகித மேலாதிக்கத்தில் சீக்கிரமாய் நம்ப வைப்பதற்காக.

7) வேதபுத்தகம், இப்படிபட்ட ஒரு பெரும் தவற்றையே போதிக்கின்றது என்று விபரீதமாக சிந்திப்பதினால் சிந்தான சக்தியுள்ளவர்களுக்கிடையில் விசுவாசமற்றவர்கள் பிறந்துவிடுவதற்கு வழி வகுத்து விடுவதற்காக.

முடிவுரை:

அண்டசராசரங்களுடைய மூலகாரணம் ஆதி அந்தமில்லாததும் சுயமாகவே இயங்குகின்றதும் தான் என்று யுக்தி போதகம் நமக்கு போதிக்கின்றது. ஏகமே வாதைத்தியம் பிரம்மா என்கின்ற உபநிடதம் இதைத்தான் போதிக்கின்றது. உலக பிதாவான அந்த பராசக்தி தான் தெய்வம். மனிதர்களுக்கு சாபமோட்சம் என்கின்ற ஒரு பெரிய வேலைக்காக அவர் சொந்த குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். பிதாவிற்கும், குமாரனுக்கும் உள்ள இந்த பெரும் ஞானம் தான் நித்திய ஜீவனுக்கு அஸ்திபாரமான சத்தியம். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன், (யோவான் :17:3) என்ற தெய்வ வசனம் இதற்கு சாட்சியாக நிற்கின்றது. குருவாகிய இயேசுவில் இருந்து வந்த இந்த வார்த்தைகளை வளைத்து ஒடிக்காமலும், காற்றில் பறக்கவிடாமலும் இருக்க வேண்டும் அல்லாமல் திரித்துவ வார்த்தை கொண்டு வருகின்றது அறிவின்மை தான்.

மற்ற மத புத்தகங்களைப் பார்க்கின்றப் பொழுது வேதபுத்தகத்திற்குள்ள மகிமை ஏறுகின்ற இந்த ஏக தெய்வ சித்தாந்தத்தை கரி பூசி காட்டுவதற்கு சாத்தான் மிக தந்திரமாக கொண்டுவந்தது தான் சாதாரண புத்திக்கு எட்டாத திரியேக தெய்வ விசுவாசம். படித்தவரும் புத்திசாலிகளுமான சபை மூப்பர்களூம் இந்த விஷயத்தில் அறியாமல் பிசாசினுடைய ஆயுதங்களாக மாறியிருக்கிறார்கள். எளிமையான வேத சத்தியங்களை வெறுத்து யெவனமுனிமார்களுடைய அடிசுவடு பின்பற்றி தத்துவ ஞானமெங்கின்ற பொய்யால் கட்டி உண்டாக்கியது தான் இந்த திரித்துவ விசுவாசம். மனிதர்களுடைய எண்ணங்களும் சிற்ப வேலையும் கொண்டு பொன்னிலும் வெள்ளியிலும் கல்லிலும் செதுக்கி வைத்திருக்கின்ற அன்னிய தேவதை கோலங்களைப் பார்த்து வெட்கப்படுகின்றது வேத சாஸ்திர ப்ண்டிதர்களுடைய விரூப சிருஷ்ட்டியான திரியேக மூர்த்தி விசுவாசம்.

திரியேக தெய்வ மெங்கின்ற கன்றுக்குட்டியினுடைய முன்னில் கிறிஸ்தவ லோகம் சாஷ்ட்டாங்க நமஸ்காரம் நடத்துகிறது. மூன்று ஆளுமைகளுக்குள்ளே ஒராளாயிருக்கின்ற பிதா குமார பரிசுத்தாவி என்ற திரியேக மூர்த்தி போல பயபடத்தக்கதும் ஏதோ ஒரு புத்தியீனன் சொன்னக் கதைப்போல அர்த்தமற்றதும், ஞானசூன்னியமுமான வேறொரு தத்துவம் பழைய தேவதா சங்கல்பங்களில் கூட இல்லை.

பரிசுத்த திரித்துவம் என்ற முத்திரையும் பக்தி வேஷமும் தரித்து பாரம்பரியத்தினுடைய துணையோடும் கூடிய இந்த திருட்டு எண்ணம் உத்தமர்கள் வழி தவறிபோகும் பொழுதும், தெய்வ வசனத்தை விசுவாசித்து, அதை கவுரவப்படுத்துகின்றவர்களுக்கு மவுனம் ஒரு அலங்காரமல்ல எங்கின்ற விசுவாசம் தான் இந்த போஸ்ட்டுகளை எழுதுவதற்குண்டான காரணம். இருட்டில் வழி தவறியலைகின்ற ஒருவருக்காவது வெளிச்சத்தின் இராஜபாதைகுள்ள வழி காட்டியாய் அமையுமென்றால் நாங்கள் வெற்றி பெற்றோம்.

(முடிவுற்றது)

தெய்வம் ஏகரோ? திரியேகரோ? - பாகம் - 4

விசுவாச பிரமாணங்களும் திரித்துவ உபதேசங்களும் :

யேகோவாவினிடையேயும் நமது கர்த்தராகிய இயேசுவினிடையேயும் வித்தியாசமான ஆளுமையையும், இரண்டு பேருக்குமுள்ள பந்தத்தையும் குறித்தும் வேதப் புத்தகத்திலுள்ள சாட்சிகள் சந்தேகமாயிருக்கும் போது திரியேக தெய்வம் எங்கின்ற விஷயத்திற்கும் கிறிஸ்த்தவர்களும்மிடையில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றால் அது மிகவும் ஆச்சரியப்பட தக்கதாயிருக்கிறது. திரியேக தெய்வம் என்றால் ஒரு தெய்வத்தில் மூன்று ஆளுமைகள் அல்லது ஒருவரில் மூன்று தெய்வங்கள். இந்த அறிவு ஒன்றுகொன்று முரன்பாடாயிருக்கிறது, ஒன்றுகொன்று விரோதமாயிருக்கிறது. இந்த பொய்யான அறிவுக்கு கிடைத்திருக்கின்ற அங்கீகாரம் விசுவாசமில்லாத பேர், சபைகளுக்கு உண்டான நித்திரையினாலும், துர் உபதேசங்களாலும் சத்துரு அவனை த்ந்திரமாய் இறுக்கி கட்டி வைத்திருக்கிறது. நமது கர்த்தராகிய இயேசு மகா சக்தி நிறைந்தவர் என்ற நிலையில் ஒரு தெய்வமாக அங்கீகருக்கும் பொழுது, அவர் தான் பிதாவும் சிருஷ்ட்டிகர்த்தரும் எங்கின்ற வேத புத்தகத்தின் பொய் உபதேசங்களை அல்லது விபரீத உபதேசங்களை நாங்கள் எதிர்க்கிறோம். இதை நாங்கள் உதறிதள்ளுகிறோம், கண்டனம் செய்கிறோம்.

திரித்துவத்தை குறித்துள்ள விசுவாச பிரமாணம் (விசுவாச அறிக்கை) மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. கிறிஸ்துவிற்கு பிதாவோடுள்ள பந்தத்தைக் குறித்து முதல் அடி எடுத்து வைத்தது கி.பி.230ல் தான். பிதாவும் குமாரனும் ஒன்று என்ற தத்துவம் கி.பி.325ல் நிக்கியாசுன்னகதோஸ் அனுமதி கொடுக்கவில்லை. கி.பி.381ல் கூச்தந்தீனோபோலீச் முதல் சுன்னகதோசினுடைய காலம் வரை இந்த திரியேக தத்துவம் பூரணாமாய் வளரவேயில்லை. ஏகரும்(ஒருவர்) பரம சத்திய சொரூபருமான யேகோவாவை ஆராதிப்பதற்கு எப்போதும் எதிர்கின்ற (மத்தேயு :4:10) பிசாசு, ஜாதிகளுடைய திரித்துவ விசுவாசத்தை கிறிஸ்த்துவ சபையைக்கொண்டு அங்கீகரிப்பதில் கடைசியாக வெற்றியடைந்துவிட்டது.

அனைத்து மதங்களுடைய பொதுவான சுபாவம் அனேக தெய்வங்களில் விசுவாசம் வைப்பது தான். சர்வாதிகாரிகளான மூன்று தெய்வங்கள், மூன்றும் சேர்ந்து ஏக தெய்வம் (ஒரு தெய்வம்) என்பது அனேக தெய்வ மதங்களுடைய அஸ்திபாரமான தத்துவம் தான். இதேப்போல பாரதத்திலுள்ளவருடைய திரிமூர்த்திகள் தான் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன். பாபிலோணிலும், அசிரியாவிலும் எனோச், இல்லினோச், ஏயோச் என்ற மூன்று தெய்வங்களுண்டு. பினீஷியாவில், உலோமச், உளலோசுரோஸ், ஏலியூல் எங்கின்ற திரிமூர்த்திகள். இவைகள் எகிப்தில் நேப், தாஸ், ஓஸிரிஸ் என்று அழைக்கப்படுகின்றன. கிரீஸில் சியூச், போசிடோள். அயிடோனியச் என்றும் ரோமில் ஜூப்பிட்டர், நெப்டியூன், ப்ளூட்டோ என்ற மூன்று தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன. கெல்டிக் ஜனங்களுக்கிடையில் இவைகள் முறையே கிரியோசின், பயோசேன, சிவன் என்றும், ஜெர்மன் ஜனங்களுக்கிடையில் தோர், வஓடார், ப்ரிக்கோ என்றும் அறியப்படுகிறது. மெக்சிக்கோவில் முன்பு வாழ்ந்தவர்கள் சூரிய தேவனை மூன்று சொரூபங்களில் வைத்து ஆராதித்தனர். அவை பிதா, சூரியன், குமார சூரியன் என்று அழைக்கப்பட்டன. அவர்களுடைய மகா சொரூபங்களில் ஒன்றுக்கு தங்கலங்கா என்ற நாமம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரில் மூன்று ஆளுமைகள். மூன்று ஆளுமைகளில் ஒருவர் என்ற பொருள் இதற்குண்டு. மூல தெய்வத்தில் இருந்து உருவெடுத்த இந்த மூன்று தெய்வங்களுக்கு திரிநாமக என்ற நாமம் அவர்கள் வழங்கினார்கள்.

பலதரப்பட்ட மத உபதேசக்காரருக்கு ஒப்பாக பல கிறிஸ்தவ மதாசாரிர்களும் சாத்தானுடைய சதி திட்டத்தில் விழுந்து பல தெய்வ விசுவாசமும், ஏக தெய்வத்தில் மூன்றாளுமைகள் என்று ஏற்றுக்கொண்டார்கள். எப்படியானாலும் யுக்தி வேறுபாடுகளுடைய காரியத்தில் அன்னிய ஜாதிகளைப் போலும் புறம் தள்ளுகிறது இந்த கிறிஸ்தவர்களுடைய திரியேக தேவ சாஸ்த்திரம்.

ஏனென்றால் தெய்வத்தில் பிதா, குமாரன், பரிசுத்தாஅவி எங்கின்ற மூன்று ஆளுமைகளும் ஒரே ஒரு தெய்வம் தான். இதனுடைய பொருள் பார்க்கும் பொழுது ஒன்று தான், வல்லமையிலும் மகிமையிலும் துல்லியரும் என்றது தான் திருத்துவ வரையறை. மற்ற மதங்களைப் போலேயுள்ள இந்த கள்ள நாணயத்த்தினுடைய மறுபக்கத்தில் பிற ஜாதிகளுடைய ஆராதனை மூர்த்தியான மகா தேவியுடைய இடத்தில் இயேசுவினுடைய மாதாவை நியமித்திருக்கிறது. திருமூர்த்திகளுக்கு அடுத்து மகாதேவிக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜாதிகளுடைய தேவன்மார்கலளுக்கிடையிலும் தேவிமார்களுக்கிடையிலும் பரிசுத்தவாங்களை நியமித்திருக்கிறது. இப்படியாக தேவன்மாரும் தேவிமாரும் உள்ள கிறிஸ்தவமல்லாத மற்ற மதங்களைப்போல கிறிஸ்தவ மதமும் மாறி, கிறிஸ்தவர் என்ற பேர் மட்டுமுள்ள கிறிஸ்த சபைகளில் கத்தோலிக்க மதத்தில் தேவன்மாரையும், தேவிமாரையும் ஆராதிப்பதிலுள்ள வேர் ஆழமாக ஊன்றிப்போயிருக்கிறது. ஆகையால் கத்தோலிக்க மதத்திற்கு பல தெய்வ மதங்களுடைய வரிசையில் இடம் கொடுக்கலாம். ப்ரொட்டஸ்டான்ட் (Protestants)- ல் முக்கால் பிரிவுகளும் அனுசரித்துவருகின்ற திரித்துவ விசுவாசம் கத்தோலிக்க மதத்திலிருந்து வந்தது தான்.

(தொடரும்)