Monday, November 28, 2011

பிராட்டஸ்டாண்டுகளினுடைய பதில்:

கடந்த காலங்களில் அனேகரும் பிராட்டஸ்டண்டுகளினுடைய திறந்த இதயத்திலும் அறிவிலும் கல்விஞானத்திலும் பெருமைப்பட்டு கொண்டார்கள். இந்த நிலையில் பிராட்டஸ்டாண்டுகளிடமிருந்து நம்முடைய கேள்விக்கு தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் திருப்திகரமாகவும் ஒரு பதிலை எதிர்ப்பார்ப்போமா? அனைத்து பதில்களும் திருப்திகரமல்ல என்று கண்டுக்கொண்டு எல்லா தரத்திலும் உயர்ந்த உதவிகளை பெற்றுகொண்டிருக்கிற இந்த கூட்டத்தினுடைய பன்னிரண்டில் ஒரு பங்கு வருகின்ற மக்களினுடைய பதில்களில், எல்லா காலங்களில் இருந்தும் ஞானத்தினுடைய தெளிவுகளும் உண்மையான சத்தியங்களும் எதிர்ப்பார்ப்போம். ஆன்னல் நண்பர்களே, நாம் என்ன பார்க்கப்போகிறோம் தெரியுமா? வெட்கத்துடன் நாங்கள் சொல்லுகிறோம் இதற்கு நேர் எதிராகத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

பிராட்டஸ்டாண்டுகளினுடைய பதிலில் நாம் கேள்விபடுகின்றது நம்முடைய எதிர்ப்பார்ப்புக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. கத்தோலிக்கருக்கும் ஜாதிகளுக்கும் தெய்வமில்லை என்று சொல்லுபவர்களுக்கும் ஒரே மாதிரியான கேலிகூத்துதான் இந்த பதில். இது ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா? இப்படி இருக்கலாமா? ஒரு நண்பருடைய சாசனைகள் குணத்திற்காகதான் பிராட்டஸ்டாண்டுகளின் பலவீனங்களை நாங்கள் வெளிப்படுத்தும் பொழுது நீங்கள் உங்களுடைய பொறுமையை இழந்துவிடக் கூடாது. யாருக்கும் வெறுப்போ கலக்கமோ உண்டாக்குவதற்கல்ல நாங்கள் இவ்வாறு கூறுவது. இந்த விஷயத்தைக் குறித்துள்ள பரிசோதனைகள் நம்முடைய நன்மைக்கு உதவுகின்றதும், உனண்மைகளை எடுத்து மக்கள் முன்னில், சத்தியத்தினுடைய திவ்வியக் கொடி உயர்வதற்கு ஆயத்தப்படுவதற்கும் உதவும் என்ற சிந்த்னையோடு தான். இதனுடைய பலன் நாமும் மற்ற அனைவரும் நமது சிருஷ்டி கர்த்தருடைய சுபாவங்கள், தீருமானங்கள், வரும் காலத்தில் மனிதவர்கத்தோடுள்ள அவருடைய கிறியைகள் இவைகளைக் குறித்துள்ள தெளிவான, ஆழமான அறிவுள்ளவராக மாற்ற வண்டும் என்பதும் தான்.

வேதனை உருவாக்குகின்ற இந்தப்பகுதி முழுவதும் மென்மையாக தொடவேண்டும். கட்டுகள் அவிழ்க்கபடுவதும் புண்ணுகளை சுத்தம் செய்வதும் வேதனை உண்டாக்குகின்றது தான். ஆனாலும் அது ஆரோக்கியமானது. ஆறிவும் சிந்தனை சக்தியுமுள்ளவர்கள் தான் நம்முடைய கத்தோலிக்க முற்பிதாக்கள். அவர்கள் பரிசீலித்துவந்த கத்தோலிக்க மத ஆசாரங்களில் உண்டான, வேத விபரீதங்களையும், மூட நம்மிக்கைகளையும் கண்டுபிடித்ததில் இருந்து பிராட்டஸ்டாண்டு என்ற ஒரு கூட்டத்தினர் (எதிர்க்கின்றவர்) என்ற நாமம் உண்டானது. அவர்கள் இவைகளை எதிர்த்தார்கள். ஆகையால் எதிர்க்கின்றவர் என்ற பொருளில் பிராட்டஸ்டாண்டு என்ற நாமம் உண்டானது. அவர் அவர்களுடைய எதிராளிகளோடு செய்ததோ எதிராளிகள் அவரோடு செய்ததோ முழுமையாய் நியாயப்படுத்துவதற்கு முடியாது.

பிராட்டஸ்டாண்டுகள் சுத்தீகரண இடத்தை மறுதலிக்கிறார்கள்:

பிராட்டஸ்டாண்டுகள் மறுதலிப்பதற்கு முக்கிய காரணம் சுத்தீகரண இடத்தைக் குறித்து வேதபுத்தகத்தில் எங்கும் ஒன்றும் சொல்லப்படவேயில்லை. நாம் மறந்து போகத்தக்க வகையில் அவ்வளவு அழகாக சுத்தீகரண இடத்தைக் குறித்துள்ள எங்கள் விசுவாச ஏடுகள் மொத்தமாக நாசம் பண்ணி தொலைவில் எறிந்துவிட வேண்டுமென்று அவர்கள் முடிவெடுத்தார்கள். இப்போது மீதியானது சொர்கமும் நரகமும் மட்டும் தான்(அல்லது பரலோகமும் நரகமும்). ஒவ்வொரு மனிதர்களும் மரிக்கும் பொழுது இவைகளில் ஒன்றில் பிரவேசித்து நித்தியம் அங்கே கழிப்பார்கள் என்று இவர்கள் போதித்தார்கள். தங்களூக்கு நேரிடப் போகும் கஷ்டங்களை உணராதிருந்த இவர்கள் காரிய சுத்தி உள்ளவர்கள் தான், ஆனாலும் நாம் எதிர்ப்பார்த்தது போல உள்ள தீர்க்கதரிசனமோ, புத்திசாமர்த்தியமோ, ஒரு தெளிவான சிந்தனையோ இவர்களுக்கு இல்லாமல் போனது. சிலசமயம் தங்களுடைய துயரங்கள் கொஞ்சமாவது புரிந்திருக்கக்கூடும் என்று கருதுவது தான் சரி. ஆனால் நம்முடைய சிந்தனைகளில் இருந்து வித்தியாசமான ஒரு பார்வையோடு தான் இவர்களில் காரியங்களை ஆராய்ந்தது. அன்று பிராட்டஸ்டாண்டுகளுக்கிடையில் மிக பிரபலமாக இருந்தது கால்வின் நோக்ஸினுடைய சிந்தனைகள் அல்லது சித்தாந்தங்கள். இந்த சித்தாந்தங்களில், தாங்கள் தான் தெய்வத்தினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம் என்றும், பரலோகத்திற்கு சொந்தக்காரர்களாகிய சிறு மந்தை என்றும், மனிதராசியில் மீதியுள்ளவர்கள் நரக்த்திற்கு சென்று சேருவார்களென்றுமுள்ள விசுவாசத்துக்கு நேராக வழி நடத்தினார்கள்.

இப்போது வெளிச்சம் கூடுதலாக :

தெய்வமே, நானும் என் மனைவியும் என் மகனும் மருமகளும் வேறேயாரும் வேண்டாம் எங்கள் நாங்கு பேர்களை மட்டும் ஆசீர்வதியும் என்பது போல் இனிமேல் பிராட்டஸ்டாண்டுகளோ கத்தோலிக்கரோ ஜெபம் பண்ண மாட்டார்கள். கத்தோலிக்கர் ஆனாலும் சரி, பிராட்டஸ்டாண்டுகள் ஆனாலும் சரி இரு கூட்டத்தினரும் இருட்டின் யுகம் என்று நாம் சாதாரணமாக சொல்லுகின்ற காலத்தை திரும்பிப்பார்க்கும் பொழுது நம்முடைய முற்பிதாக்கள் புத்தியோடும் ஞான திருஷ்டியோடும் உக்தியோடும் சிந்திப்பதற்கு பாத்திராக்கிய தெய்வத்திற்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். முன் நிச்சயிக்கப்பட்ட உபதேசத்தின் படி வளர்ந்தவராகிய நாம், ஜாதிகள் உதறி தள்ளினது அவர்களுடைய நாசத்திற்கு தான் என்று சொல்லவில்லை. வெஸ்டுமினிஸ்டரில் நடந்த விசுவாச வரவேற்பு சம்மதிக்கின்றவர், மிஷனரி வேலைகள் மூலமாக மக்களுக்கிடையில் சுவிசேஷம் பரப்புவதில் இன்று அதிக நாட்டம் காட்டுகிறார்கள். நம்முடைய புத்தியுள்ள இதயமாய் இன்னும் தேவையானதுபோல பொருத்தப்படவேயில்லை ஆனாலும் நம்முடைய இதயம் கூடுதலான சத்தியமும் சிரேஷ்ட்டவுமாயிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளம். இப்பொழுது நாம் ஆழ்ந்த புத்தியுள்ள உபதேசங்களில் கவனம் செலுத்துவதும் அவை நேரே உள்ளவைகள் என்று நினைப்பதற்கும் முயற்சிக்கிறோம்.

சித்தாந்தமான பிராட்டஸ்டாண்டுகளின் உபதேசம் வேத புத்தகத்தோடும் கத்தோலிக்க விசுவாசத்தோடும் சேர்ந்து பரலோகம் பரிபூரணத்தின் இடமென்றும் அங்கே பிரவேசிக்கின்றவர்களுக்கு எந்தவித மாற்றமும் உண்டாக கூடாது, ஆதலால் பரலோக வீட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக எல்லாவித பரிசோதனைகளும், சுத்தீகரணமும், அலங்காரங்களும் செய்து முடித்திருக்க வேண்டும் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஒரு வார்த்தையில் சொன்னால் இப்போது இயேசுவினுடைய அடிசுவடுகளில் நடக்கின்ற இதய சுத்தியுள்ளவரும் வெற்றிபெற்றவருமான தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் தான் அங்கே பிரவேசிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒன்று சேருகிறோம். ஆனால் மனித வர்கத்தின் மீதியுள்ளவர்களுடைய நிலை என்ன? ஆம் அங்கே தான் கஷ்ட்டமாய் இருக்கிறது. தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டம் போக, மீதமுள்ள அனைவரும் நித்திய தண்டனைக்கு விட்டு கொடுப்பதற்கு நமது விசுவாச பிரமாணங்கள் அங்கீகரிக்கின்ற வாதம் அது தான் என்றாலும் நமது இதயம் அதற்கு தயார் இல்லை. இன்றைய மனிதர்களில் முக்கால் பங்கு தெய்வத்தையும், இரட்சிப்பின் காரியங்களைக் குறித்தும் ஒருபோதும் கேள்விப்படாத ஜாதிகள் என்று சொல்லிக் கொள்ள நமது இதயம் அவைகளை எதிர்க்கிறது.

நல்ல மக்கள் பயப்படுகிர்ரார்கள் :

நம்முடைய விசுவாச பிரமாணங்கள் நம்மை பயப்பட வைக்கிறது. எப்படியென்றால் இந்த பாக்கியமில்லாத சிருஷ்ட்டிகள் நித்திய நாசத்திற்கு செல்கிறது என்று விசுவாசிக்க நம்முடைய மனம் மறுக்கிறது. பரலோக வாசிகளில் முக்கால் பங்கு யாதொரு வகையிலும் மறுபிறப்பு இல்லை என்று விசுவாசிக்கின்றது உண்மையாகவும் வேத வசனத்திற்கு மட்டுமல்ல புத்திக்கும் யுக்திக்கும் எதிரானது. சுத்தீகரண இடத்தைக் குறித்த உபதேசதை புறம் தள்ளி அந்த விசுவாச பிரமாணத்தினுடைய மீதியுள்ள காரியங்களை வைத்து ஆசரிப்பதிலும் நம்முடைய மூப்பர்கள் நம்மை விடவும் காரியங்கள் வசமாகி விட்டார்கள். சுத்தீகரண இடம் திருவசனத்திற்கு எதிராயிருக்கிறது என்று நாம் மறுதலிப்பதினால் உலகம் முழுவதுமாக உள்ள நித்திய தண்டனை வேதத்திற்கு விபரீதமென்ற நிலையில் நாம் எதிப்பு தெரிவிக்க வேண்டாமா? மேலும் கிறிஸ்து முகாந்திரம் பூமியிலுள்ள சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்ப்டுவார்கள், சத்தியத்தைக் குறித்துள்ள ஞானத்திலும் அறிவிலும் தெய்வத்தோடு நிரப்பும் கிறிஸ்து முகாந்திரம் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்வதற்குள்ள ஒரு வாய்ப்பு கொண்டும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று வேத புத்தகம் பிரகடனம் செய்கின்ற நிலைக்கு அது அவசியமாயிருக்கிறது. நித்திய தண்டனையுடைய அறிவின்மையும் இங்கே ஊன்றி சொல்ல வேண்டியது அவசியமாக தான் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். எப்படியானாலும் இந்த விஷயத்தைக் குறித்துள்ள பிராட்டஸ்டாண்டு நம்பிக்கைகளை நாங்கள் இங்கே வெளியிட விரும்புகிறோம்.

1. தெய்வத்தினுடைய ஞான சக்திகள் மனிதனுடைய தாழ்ச்சியை முன்னரே கண்டறிந்து மனித வர்கத்தினுடைய தண்டனைக்காக நரகம் என்கின்ற ஒரு மகாதாவளம் (மகா ஸ்தலம்) உண்டாக்கி அக்னி தண்டனைக்கு பாத்திரராகாத துர் ஆத்துமாக்களை போட்டுக் கொண்டு தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டம் அல்லாத மற்ற மனிதர்களுகாக நரகம் என்ற இடம் உண்டாக்கினார் என்று கால்வின் சொல்லுகிறார். இந்த சிந்தனையில் அன்பும் நீதியும் புறம் தள்ளப்பட்டிருக்கிறது.

2. ஒரு வேளை முக்கால் பங்கு மக்களும் இன்றைக்கு அங்கீகரித்திருக்கின்ற அர்மீனியன் தத்துவத்தின் படியும் மற்றும் பிராட்டஸ்டாண்டு விசுவாசத்தின் படியும் ஞான சக்திகளை மாற்றி நிறுத்தி, தெய்வ அன்பு, நீதி இவைகளை உலக சிருஷ்டிகள் நடத்தியும் தண்டனைகளை உண்டாக்கியும் செயல் பட்டார்கள். அதனால் சிருஷ்டிகளினிடத்தில் நீதியுடனும், அன்புடனும் பழகுவதற்குள்ள முயற்சியில் அவசியமாக உதவி கொடுப்பதற்கு முடியாமல் தெய்வம் குழம்பிப் போயிருந்தார்.

நண்பர்களே, இந்த விஷயம் சம்பந்தமான ஆராய்சியில், எங்களுக்குக் கிடைத்த கஷ்டங்கள் முழுவதும் தெய்வ வசனத்தை ஆராய்ந்து பார்க்காமல் மனிதர்களுடைய வாய்மொழிகளை பார்த்து போனதில் மட்டும் தான்.

சத்தியம் கற்பனை கதைகளைக் காட்டிலும் நம்ப முடியாததாக தான் இருக்கிறது:

தெய்வம் நம்மை போலல்ல, உன்னதமானவர். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் (மத்தேயு:5:44) என்றும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனம் கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு பானங்கொடு (ரோமர்:12:20) என்றும் கர்த்தர் சொல்லியிருக்கிறார். தெய்வம் நித்தியம் நித்தியமாய் தம்முடைய சத்துருக்களை தண்டிப்பார் என்று நம்புகிறது எவ்வளவு விசித்திரமானது. அதுமட்டுமல்ல, அவருடைய சத்துருக்கள் அல்லாத இப்பொழுது விசுவாசிகளாக மாறுவதற்கு முடியாதவர்களையும் தெரியாதவர்களையும் அறிவீனமானவரையும் அவர் தண்டிப்பார் என்று சொல்லுகிறார். சிந்தனை குழப்படியில் இருந்தும் அடுக்கும் கிரமமும் கண்டு பிடிப்பதற்கும் நம்முடைய வர்கத்தோடுள்ள அவருடைய நடத்துதலும் உண்மையான மதிப்பு மீட்டு எடுப்பதற்கும் ஒரே ஒரு தீர்க்கமான தேடலில் இருந்து தான் முடியும். அதுதான் நம்முடைய வேத புத்தகத்தில் வெளிப்ப்டுத்தியிருக்கின்ற படி உள்ள சத்தியத்தை தேடுதல் ஆராய்ச்சி தொடரும் ...

(தொடரும்...)


Thursday, November 17, 2011

கத்தோலிக்க மதத்தினுடைய பதில் :

ஜாதிகளை விட்டுவிட்டு ஞானிகளும் உலக மக்களில் கால் பங்கு வசிக்கின்றவருமாகிய கிறிஸ்துவர்களிடம் நாங்கள் இந்த கேள்வி கேட்கிறோம். கிறிஸ்தவரே உங்கள் பதில் என்ன?

பதில் இவ்வாறு தான்:

எங்களிடம் வித்தியாசமான பதில்கள் உண்டு. எங்களில் மூன்றில் இரண்டு பங்கு கத்தோலிக்க விசுவாசமுள்ளவர்கள். ஒரு பங்கு பிரட்டஸ்டன்ட் (Protestant) விசுவாசமுள்ளவர்களுமாயிருக்கிறோம். பழமையானதும் அதிக மக்கள் தொகையுள்ளதுமானதால் முன் வரிசையில் கத்தோலிக்க பிரிவினர் நிற்கிறார்கள். யவன சபை மற்றும் ரோமன் சபைக்குட்பட்ட கத்தோலிக்க பிரிவினுடைய பதிலை நாம் பார்ப்போம். மரித்தவர் எங்கே? எங்கின்ற விஷயத்தைக்குறித்து, தெய்வம் தந்தது என்று உரிமை பாரட்டுகின்ற திவ்விய வெளிப்பாட்டின் அடிப்படையில் நீங்கள் நடத்திய கடுமையான உழைப்பிற்கும் படிப்பறிவினைக்கும் கிடைத்த கனிகளும், உங்கள் மூத்த சிந்தனையாளர்களையும் வேத சாஸ்த்திர ஞானிகளுடைய யோசனைகளையும், எங்கள் கத்தோலிக்க நண்பர்களே! எங்களுக்குத் தாருங்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் யாதொரு முன் விதியுமில்லாமல் பொறுமையோடும் கவனத்தோடும் கேட்கிறோம்.

நமது கத்தோலிக்க சகோதரர்கள் இவ்வாறு பதில் தருகிறார்கள்:

உங்கள் கேள்விக்கு தக்க பதில் நாங்கள் தருகிறோம். திவ்விய வெளிப்படுத்துதலுடைய எல்லா தரிசன திசைகளிலும் நாங்கள் இந்த விஷயத்தைக் குறித்துதான் பரிசோதனைகள் செய்தோம். ஒரு மனிதன் மரிக்கும்பொழுது மூன்று இடங்களில் ஒன்றில் செல்கிறான் என்பதுதான் எங்களூடைய விசுவாசமும் உபதேசமும். முதலாவதாக பரிசுத்தர். இவர்களுடைய தொகை மிகவும் குறைவு. இவர்கள் மரித்தவுடன் தெய்வ சன்னதியில் பரலோகத்திற்கு செல்கிறார்கள். தன் சிலுவையை சுமந்துக்கொண்டு எனக்கு பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்கமாட்டான் (லூக்கா:14:27) என்று கர்த்தராகிய இயேசு சொல்லியிருப்பது இவர்களைக்குறித்து தான். சத்தியத்தோடும், விசுவாசத்தோடும் சிலுவை சுமந்தவர்கள் தான் இந்த சிறிய ஆட்டின் கூட்டம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம். இவர்களைக் குறித்து ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் (மத்தேயு:7:14) என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

இந்த பரிசுத்தவான்களுடைய கூட்டத்தில் எங்களுடைய பாஸ்டரோ, பிஷப்போ, கர்தினரோ, போப்ஆண்டவரோ, யாரும் இக்கூட்டத்தில் இல்லை. காரணம் இவர்களில் யாராவது மரிக்கும்பொழுது அவர்களுடைய ஆத்துமாக்களுடைய சாந்திக்காக திவ்விய பலிகள் சமர்ப்பிக்கிறார்கள். இது சபையினுடைய ஒரு சட்டம் (நியமம்) என்று உங்களுக்குத் தெரியும். பரலோகம் தான் என்று விசுவாசிக்கின்ற யாருக்காகவும் நாம் திவ்விய பூஜைகள் சமர்பிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அங்கே அனைத்து ஆத்துமாவிற்கும் சாந்திஉண்டு. நித்திய நரகம் தான் என்று விசுவாசிக்கின்றவர்களுக்காவும் நாம் திவ்விய பூஜைகள் சமர்பிக்கத்தேவையில்லை. எப்படியானலும் அனேகம் பேர்கள் நித்திய நரகத்திற்கு செல்லமாட்டார்கள் என்ற சத்தியத்தை நாங்கள் இங்கே கூறிக்கொள்கிறோம். மனம் திருந்தாத மதவிரோதிகள் கத்தோலிக்க சட்டங்களை குறித்து முழு ஞானமுண்டு என்றாலும் அவைகளை மனபூர்வமாக எதிர்த்தவர் மட்டும் தான் பயங்கரமும் வேதனையானதுமான இந்த நிலையை அடைவார்கள் என்று தான் நாங்கள் போதிக்கிறோம்.

அனேக இலட்சங்கள் சுத்தீகரண இடத்திற்கு:

எங்களுடைய சித்தாந்தத்தின் படி மரித்தவர் மொத்தத்தில் அந்த நிமிடத்தில் சுத்தீகரண இடத்துக்கு செல்கிறார்கள். இந்த பெயரில் இருந்து புரிகிறது போல விரதங்கள் இருப்பதாலும் குற்ற அறிக்கையிடுதலும் கஷ்டங்களும் உள்ள இடம் தான் என்றாலும் ஆசைக்கு இடமில்லாமல் இல்லை. தண்டனைக்கு ஒருவனுடைய யோக்கியதையும் அவனுடைய காரியங்களின் அடிப்படையில் இங்கேயுள்ள தண்டனைக்காலம் நூறாண்டுகளோ, அனேகாயிரம் ஆண்டுகளோ ஆகலாம். அதிகம் அறிய வேண்டுமானால் ஒரு பிரசித்திப்பெற்ற கத்தோலிக்கனும் கவி பண்டிதனுமான டாண்டே என்பவருடைய எழுத்துக்களை நாம் பார்க்கலாம். டாண்டே ஒரு உத்தம கத்தோலிக்கன். சபையினுடைய முழு பதவிகளுடன் ஒரு ஆசிரமத்தில் மரணமடைந்தார். இதனைக் குறித்த எங்களுடைய சிந்தனை படி டாண்டே தன்னுடைய இன்போர்ணோ (நரகம்) முதலான கவிதைகளில் சுத்தீகரண இடத்திலுள்ள தண்டனைகளுடைய நல்ல படங்கள் வரைந்திருக்கிறார். இந்த கத்தோலிக்க காவிய புத்தகங்களுடைய பதிப்பு உங்களுக்கு எந்த ஒரு நூலகத்திலும் கிடைக்கும்.

டோரே என்ற கலைஞர் பிரசித்திபெற்ற ஒரு கத்தோலிக்கனாயிருந்தார். இவர் டாண்டேயுடைய காவியத்தை மிக தெளிவாகவும் அழகாகவும் படமாக வரைந்திருக்கிறார். இன்போர்ணோ காவியத்தில் வர்ணித்திருக்கிறதுபோல நரக வேதனைகளை இவரது ஓவியங்களில் விவரித்திருக்கிறார். அதன் படி உயரமான மலைகளிலிருந்து வெட்டி கொதிக்கின்ற தண்ணீருக்குள் தள்ளி விடுகின்றது வரையிலும் பிசாசுகள் பின் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. சிலரை அவர்கள் அக்னிசூலங்கள் கொண்டு அடிக்கிறார்கள். வேறே சிலரை தலைகீழாய் நிறுத்துகிறார்கள். மற்ற பலரை அவருடைய பாதங்களை குழிக்குள்ளிட்டு சுடுகிறார்கள். சிலருக்கு பாம்பு கடி கிடைக்கிறது வேறு சிலர் உரைந்து மறைந்து போகிறார்கள். இப்படியாக இந்த சித்திரம் தொடர்ந்து கொண்டே போகிறது. டாண்டேவினுடைய இன்போர்ணோ காவியத்தை வாசிப்பதற்கு நாங்கள் போதிப்பது மரித்தவர் எங்கே? என்ற உங்களுடைய கேள்விக்கு தக்க பதிலானதால் கத்தோலிக்கருடைய விசுவாசம் அதில் தெளிவாக இருப்பதினால் தான்.

சுத்தீகரண இடத்தில் தான் முக்கால் பங்கு மக்கள் கூட்டம். ஏன் என்றால் அறிவின்மை இரட்சை அடைவதற்கு காரணமாகவோ பரலோக பதவிக்கு யோக்கியமாகவோ செய்ய முடியாது. பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு முன்னதாக அதற்கு பாத்திரமான எல்லோரும் சாத்தியமாகாத ஒரு சம்பிரதாயத்தில் சேர்ந்தவரும் ஆயத்தப்பட்டவருமாயிருக்கவேண்டும். பிராட்டஸ்டான்டு வகுப்பிற்குட்பட்ட இலட்சங்கள் அங்கே தான் உள்ளது. கத்தோலிக்க சபை மூலமாக அல்லாமல் அவர்களுக்கு பரலோக பிரவேசம் கிடைக்காது. அவர்களை கத்தோலிக்க மதம் புறக்கணித்தது, நாங்கள் பிறந்ததும் பரிசீலித்ததுமான விசுவாசத்தினுடைய வரவேற்பு மூலமாகயால், அவர்களை நித்திய நரகத்திற்கு பாத்திரராக எண்ணுவதற்கு தெய்வத்திற்கு முடியாது.

கத்தோலிக்கரும், கிட்டத்தட்ட அனைவரும் சுத்தீகரண இடத்திற்கு போகிறார்கள். சபையுடைய உதவிகரம், பரிசுத்த தண்ணீர், பாவங்கள் அறிக்கையிடுதல், திவ்விய பூஜைகள், புண்ணிய ஜலம், சுத்தமாக்கப்பட்ட சுடுகாடுகள் இவைகள் அனைத்தும் இருந்தும் அவையெல்லாம் பயனற்று போகுமாறு குணத்தில் தூய்மை, இவர்கள் சுத்தீகரண இடத்திலுள்ள சோக நிகழ்ச்சிகள் வழியாக இதயம் பரலோகத்துக்கு உகந்ததாக ஆயத்தப்படும் வரை அங்கே இருந்து புறம் தள்ளப்படுவார்கள். ஆனாலும் கத்தோலிக்கனுக்கு அவ்வளவு காலம் சுத்தீகரண இடத்தில் வாழவேண்டியதில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.

துக்ககரமான ஒரு எதிர்பார்ப்பு:

தங்களுடைய நிலைபாடுகளைக் குறித்துள்ள இந்த அறிவிப்பிற்கு (இந்த சித்தாந்தத்துக்கு) நாம் பெருமை பாராட்டலாம். அவர் சொல்லுகின்ற சுத்தீகரண இடம் எங்கே? என்றோ அல்லது அதனுடைய விவரங்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்றோ நாங்கள் கேட்கவில்லை. காரணம் அந்த மாதிரியான கேள்விகளால் அவர்கள் யாருக்கும் மனவருத்தம் வருவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தைக் குறித்து தெளிவான, அறிவு பூர்வமான கருத்தை அறிவதற்கு நாங்கள் விரும்புகிறோம். அவர்களுடைய இந்த பதில் நாங்கள் எதிர்பார்த்த படி, வேதத்திற்குட்பட்டதும் தெளிவானதும் ஞானமுள்ளதுமல்ல என்று சொல்வதில் நாங்கள் வருந்துகிறோம். அப்போஸ்தலர் சொல்லுகின்ற விதத்தில் முதல் பாவம் நிமித்தம் நாம் இப்போதே ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் காலத்துக்குள் இந்த வாழ்க்கையும் துக்கமானது தான் என்ற சிந்தையும் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுள்ள சோதனைகள் தீரும் பொழுது, நித்தியம் போகட்டும், கொஞ்சம் நூற்றாண்டு வரைதான் என்கின்ற டாண்டேவினுடைய சித்திரங்கள் போலுள்ள பயங்கரமான காரியங்களுக்கு பாத்திரராய்த்தீருமோ என்கின்ற பயம் ஒவ்வொருத்தரையும் வாட்டி வதைக்கிறது. இவ்வாறு துக்கமான நூற்றாண்டுகள் சுத்தீகரணமும் தெய்வ சன்னிதிக்கும் பரலோக மகிமைக்கும் பாத்திரராக மாற்றும் என்றிருந்தாலும் நம் எல்லோருக்கும் துக்கமும் மகிழ்ச்சியின்மையும் உண்டாக்குகிறது.

எங்களுடைய கேள்விக்கு கத்தோலிக்கர் கொடுத்திருக்கின்ற பதில், மற்றவர்களிலிருந்தும் மேன்மையில்லை என்று சொல்லுகின்றபொழுது வேத பண்டிதர்களுக்கு புதுமையாய் தோன்றும், ஆனாலும் அதுதான் உண்மை எங்கள் இதயமோ, மனதோ திருப்தியடையவில்லை. இன்னும் திருப்திகரமான ஒரு பதிலை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டியதாய் இருக்கிறது. மேலும் திருப்திகரமான ஒரு பதிலை தேடுவது தான் சரியாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.

தொடரும் ....

Wednesday, November 9, 2011

மரித்தவர் எங்கே?

பரிசுத்தவான்களும் பரிசுத்தமில்லாதவரும் ஆடம்பரமானவர்களும் ஆடம்பரமில்லாதவர்களும் தனவான்களும் தரித்திரர்களும் ஆகிய நம்முடைய சொந்தகாரர்களும் நண்பர்களும் அயல் வீட்டாரும் ஆகிய எல்லோரும் மரித்திருக்கிறார்கள், மரித்துப்போன இவர்கள் எங்கே?

“சகோதரர்களே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களிடையே தைரியமாய்ப் பேசுவதற்கு இடம் கொடுங்கள். அவன் மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. “தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. (அப்போ:2:29,34).

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷ குமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் :3:13)

பரிசுத்தவானோ, பரிசுத்தமற்றவனோ, ஆடம்பரமானவனோ ஆடம்பரமில்லாதவனோ நம்முடைய சொந்தகாரரும் நண்பர்களும் எங்கே? இந்த கேள்வியினுடைய பதிலுக்கு நம்முடைய வாழ்க்கையோடு விதி கற்பிக்கின்ற ஒரு பாடம் உண்டு. அது நம்முடைய வேத சாஸ்திரங்களையும் வாழ்க்கை வரலாறுகளையும் பாதிக்கிறது. சரியான பதிலும் நல்ல தெளிவும் சக்தியும் நமக்கு தருகிறது. நல்ல அறிவின் ஆத்துமா நம்மில் உண்டாவதற்கு உதவியாய் இருக்கும். இந்த விஷயம் எனக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்று யாராவது சொன்னால் அவர் புத்தியில்லாதவரும் சிந்தனை சக்தியில்லாதவரும் என்று சுயமாக சொல்லிக்கொள்கிறார்கள். கொஞ்சம் காலத்துக்கு மட்டும் நம்மை நடத்துகின்ற, உணவு, உடை, தனம், அரசியல் போன்ற இந்த வாழ்நாளில் சாதாரண விஷங்கள் போல் கணக்கிலெடுக்கவேண்டியதும் படிபதற்கும் என்றால் நாமும் நம்முடைய அண்டைவீட்டாரும் மொத்தத்தில் மனுஷ ராசியின் நித்தியமான வருங்காலம் எவ்வளவு கவனிக்கப்படவேண்டியதாயிருக்கிறது.

தெய்வம் இல்லை என்று சொல்லுகிறவர்களுடைய பதில் என்ன?

சொந்தமாகவும் சுதந்திரமாகவும் சிந்திப்பதில் பெருமை அடைகின்றவரும் தெய்வம் இல்லை என்று வாதிடுகின்றவர்களுமாகிய எங்களுடை நண்பர்களாகிய உங்களிடம் ஒரு கேள்வி, மரித்தவர் எங்கே? என்ற எங்களுடைய தேடுதலுக்கு உங்கள் பதில் என்ன? உங்களுடைய பதில் இவ்வாறு தான் இருக்கும், எங்களுக்கு தெரியாது. வருங்கால வாழ்க்கையை நாங்கள் விசுவாசிக்கிறொம். ஆனால் அதற்கு ஒரு தெளிவும் இல்லை. தெளிவுகள் ஒன்றும் இல்லாததினால், மிருகங்களைப்போல மனிதர்களும் மரிக்கிறார்கள். பரிசுத்தவான்களுடைய பாக்கியங்களைக்குறித்துள்ள உங்கள் நம்பிக்கைகளை அவமதித்தாலும் எங்களுடைய இந்த அறிவில் ஒட்டுமொத்த மனித குலமும் ஆறுதல் அடைவார்கள். காரணம் முக்கால் பங்கு மனிதர்களுடைய நம்பிக்கையின் படி, வேதனையில் வாழ்வதைக்காட்டிலும் மிருகங்களைப்போல இறந்துபோவதுதான் நல்லது.

கீழ்தரமான இந்த பதிலுக்கு நாங்கள் எங்கள் நண்பர்களிடம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு வாழ்க்கை உண்டு என்றோ உண்டாயிருக்க வேண்டுமென்றோ, வாஞ்சிக்கின்ற எங்கள் இதயத்திற்கோ, புத்திக்கோ இந்த பதில் போதுமானதல்ல. திவ்வியதரிசனத்தில் மனிதன் உன்னதமானவன் என்று சொல்ல தக்க வண்ணமாக சிருஷ்டித்த கர்த்தர் அவனுடைய தாலந்துகளில் மிருகத்தை காட்டிலும் ஒரு உயர்ந்த பதவியில் படைத்திருக்கிறார் என்று பறைசாற்றுகின்ற நம்முடைய உள் மனதிற்கோ இந்த பதில் திருப்தி தரவேயில்லை. அதுமட்டுமல்ல இந்த சிறுவாழ்நாளில் அனுபவிக்கும் வேதனைகளும் கஷ்டங்களும் அனுபவங்களும் படிப்பினைகளும் பிரயோஜனப்படுவதற்கு ஒரு சந்தர்பம் இல்லாமல் போனால் இதெல்லாம் தேவையில்லாததும் பரிதவிக்க கூடியதாயிருக்கும். நம்முடைய கேள்விக்கு திருப்திகரமான ஒரு பதில் கண்டுப்பிடிப்பதற்கோ நாம் கூடுதலாக ஆராய்ந்து பார்க்க வேண்டியதாயிருக்கிறது.

ஜாதிகளுடைய பதில்:

உலகத்தில் முக்கால் பாகம் ஜனங்களும் ஜாதிகளானபடியினால் மக்கள் தொகையைப்பார்க்கும்பொழுது மரித்தவர் எங்கே? என்ற கேள்விக்கு அவர் தருகின்ற பதில் தான் அடுத்ததாக நாம் ஆராய்ந்துப்பார்க்கவேண்டியது. அவர் இரண்டு சாதாரணமான பதில்கள் தான் தந்தார். மறுபிறவியில் விசுவாசிக்கின்றவர்கள் தான் அவரில் முக்கியமானவர்கள். அவர் இவ்வாறு பதில் தருககிறார், ஒருவர் மரிக்கும்பொழுது அந்த ஆள் மரிக்கிறதில்லை. ஒரு மாற்றம் மட்டும் உண்டாகின்றது இந்த ஆயுசில் உள்ள ஜீவிதத்திற்கு வாழ்க்கை பிரகாரம் தான் அந்த ஆளுடைய வருங்காலமும் அந்த ஆளுடைய வாழ்க்கையின் பிரகாரம் உயர்ந்ததோ தாழ்ந்ததோ ஆன ஒரு வாழ்க்கை கிடைக்கும். சில சமயம் பூனையாகவும் நாயாகவும் எலியாகவும் யானையாகவும் வரலாம். முன்னே நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் இப்பொழுதுள்ள வாழ்க்கை புத்திசாலித்தனமாக வாழ்ந்தால் மேதைகளாகவும், ஞானிகளாகவும் பிறகு பிறப்பார்கள் என்றும் கிடைத்த வாழ்க்கையை துஷ்டத்தனமாக வாழ்ந்தால் திரும்பவும் தாழ்ந்த நிலையிலுள்ள ஒரு ஜீவனாக மாறுமென்று என்று நாங்கள் நம்புகிறோம். அப்போது யானையாகவும் ஒரு புழுவாகவும் அல்லது மற்ற எந்த ஒரு மிருகமாகவும் வரலாம். அதனடிபடையில்தான் நாங்கள் தாழ்ந்த நிலையிலுள்ள மிருகங்களோடும் பிராணிகளோடும் அன்பு காட்டுகின்றதும் எந்தவித மாமிச ஆகாரங்கள் நாங்கள் சாப்பிடாத்ததும். நாம் ஒரு புழுவை காலால் மிதித்து சாகடித்தால், நம்முடைய மரணத்திற்கு பிறகு இதைபோலுள்ள பிராணியாக பிறக்க கூடும்.

(2) ஜாதிகளில் ஒரு பாகம் ஜனங்கள் அதாவது நன்மை செய்கின்றவர்களுக்கு, நல்ல இடங்களும் தீயவர்களுக்கு பல தரத்திலுள்ள தண்டனை கிடைக்கின்ற நரகமும் கிடைக்குமென்று நாங்கள் நம்புகிறோம், மனிதர்கள் மரிக்கும் பொழுது அவர்களுடைய முந்தைய நிலைமையைக்காட்டிலும் மிகவும் தாழ்ந்தவராக மாறும் என்றும் வைதரணி எங்கின்ற பரலோக நதி கடக்கும் பொழுது நல்லவர்களோ அல்லது தீயவர்களோ இவர்களுடைய வாழ்க்கையோடு சேரும் என்றும் ஆசீர்வாதத்திற்கும் தண்டனைக்கும் வித்தியாசமான படிகள் உண்டு என்றும் அவர் உபதேசிக்கிறார்கள் இந்த சிந்தனை அல்லது இந்த அறிவு, உங்களுக்கு எங்கேயிருந்து கிடைத்தது? என்று நாங்கள் கேட்கிறோம். பதில், இவ்வாறு தான். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த விசுவாசத்தில் தான் நாங்கள் வாழ்கின்றோம். இதனுடைய உற்பத்தியைக்குறித்து எங்களுக்கு தெரியாது. எங்களுடைய முற்பிதாக்கள் இவ்வாறு எங்களுக்கு உபதேசித்து வழி நடத்தியிருக்கிறார்கள். நாங்கள் இதை விசுவாசித்து வாழ்கிறோம்.

ஆனால் இந்த பதில் நம்முடைய புத்திக்கோ மனதிற்கோ சேர்ந்ததல்ல. பொய்யான உபதேசங்களும் வழிந்டத்துதலும் நம்முடைய விசுவாசமல்ல. நாம் பந்தம் வைத்திருக்கின்ற கர்த்தராகிய தெய்வத்தினுடைய திவ்விய வெளிப்பாட்டை நாம் தேடவேண்டியதாயிருக்கிறது.

தொடரும்...

Wednesday, September 21, 2011

தெய்வம் ஏகரோ? திரியேகரோ? - கடைசிப் பகுதி

பிதா குமார பரிசுத்தாவி மூவரும் சேர்ந்து ஒரு தெய்வம் என்ற வாதத்திற்கு சாதகமாயிருக்கின்ற ஒரு வாக்கியமோ திரித்துவம் என்ற சொல்லுக்கு ஒரு வார்த்தையோ வேதபுத்தகத்திலில்லை. பிதாவினுடைய சர்வாதிகாரத்தை புறம் தள்ளுகிறதாகவோ அல்லது குமாரன் தான் பிதா என்று அறிவிக்கின்றதாகவோ உள்ள ஒரு புள்ளியோ ஒரு கமாவோ வேதபுத்தகத்திலில்லை.

கணித சாஸ்த்திரமனுசரித்து திரித்துவம் என்றால் 3 x 1 = 3, 1 = 3, 3 = 1 என்று வருகிறது. திரித்துவ சித்தாந்தத்தில் இருந்து உருவெடுத்த நிரூபணங்கள் பிதாவைப்போல் வயதுள்ள குமாரன். தெய்வத்தினுடைய ஒரு பாகம் மரித்துப்போனது, தெய்வத்தினுடைய ஒரு பாகம் தெய்வத்தோடு ஜெபிப்பது, பரீட்சைக்குட்பட்டது. பாடுகள் அனுபவித்து, கொஞ்ச நாளில் மரணமடைந்தது. ஒரு குமாரன் சொந்த பிதாவிற்கு உயிர் கொடுத்து, திரும்பவும் தெய்வமனிதன் என்ற ஒரு விசேஷப்பட்ட ஆன்மாவாயிருக்கின்ற தெய்வத்திற்கு (யோவா :4:24) பரிசுத்தாவி எங்கின்ற இரண்டாவது ஆத்தும ஜீவியுண்டு. பிதா குமார பரிசுத்தாவி ஒரு தெய்வம் ஆனாலும் மூன்று தெய்வங்கள்.

பொருளில்லாததும் துர்வியாக்கியானம் செய்ததும், பொய்யானதுமான திரித்துவ சித்தாந்தம் வார்த்தைகளுக்கும் மனதிற்கும் விஷயமாகதது. அது மர்ம பிரதானமானதினாலும் கேள்வி கேட்காமல் கண் மூடி விசுவாசிக்க வேண்டுமென்று இக்கூட்டத்தினர் சொல்லுகிறார்கள். ஆனால் வேதபுத்தகம் மர்மம் என்று சொல்லுவது இப்போது மறைந்திருக்கிறதும் அந்தந்த நேரத்தில் நிச்சயித்திருக்கின்ற ஆளுமைகளாக வெளிப்படுத்தி கொடுக்கின்றதுமான ரகசியங்களைக் குறித்துதான்.

திரித்துவ உபதேசம் கிறிஸ்தவ மதத்தில் சாத்தான் ஏன் கொண்டுவந்தான்?

சாத்தானுடைய ஏழு வித கெட்ட இலட்ச்சியங்களை சாதிப்பதற்காக இந்த திரித்துவத்தை கிறிஸ்தவ மதத்தில் நுழைத்தான்.

அவைகள்:

1) யெகோவாவினுடைய மகிமையை குறைத்து காட்டுவதற்காகவும், அவருக்கு கிடைக்க வேண்டிய உன்னதமான பதவியிலும், அன்பிலும் மாயம் சேர்ப்பதற்காக.

2) பிதாவும் இயேசுவும் ஒன்று தான் என்ற கொள்கை முகாந்திரம் பிதா பக்தனும் எளிமையுள்ளவருமான குமாரனுக்கு துக்கமும் அவமானமும் வருவதற்காக.

3) புத்தியீனமும் மதியற்றதும் என்று காட்டி தெய்வ நிச்சயத்தைக்குறித்து நம்மை இருட்டில் தள்ளுவதற்காக.

4) வேத புத்தகம் முறன்பாடுள்ளதும் பொய்களும் நிறைந்த ஒரு விஷப்புத்தகம் என்று காட்டுவதற்காக.

5) விவேகத்தோடும் ஞானத்தோடும் முழு மனதோடும் தெய்வத்தை ஆராதிப்பதற்கும் நினைப்பதற்கும் முடியாத விதத்தில் தெய்வ ஜனங்களுக்கு சிந்தனை குழப்பங்களை கொடுத்து இவர்களுடைய மனதினை நிர்விசாரமாக்குவதற்காக.

6) இந்த விசுவாசத்தில் அடிமைகளானவர்களை மதபுரோகித மேலாதிக்கத்தில் சீக்கிரமாய் நம்ப வைப்பதற்காக.

7) வேதபுத்தகம், இப்படிபட்ட ஒரு பெரும் தவற்றையே போதிக்கின்றது என்று விபரீதமாக சிந்திப்பதினால் சிந்தான சக்தியுள்ளவர்களுக்கிடையில் விசுவாசமற்றவர்கள் பிறந்துவிடுவதற்கு வழி வகுத்து விடுவதற்காக.

முடிவுரை:

அண்டசராசரங்களுடைய மூலகாரணம் ஆதி அந்தமில்லாததும் சுயமாகவே இயங்குகின்றதும் தான் என்று யுக்தி போதகம் நமக்கு போதிக்கின்றது. ஏகமே வாதைத்தியம் பிரம்மா என்கின்ற உபநிடதம் இதைத்தான் போதிக்கின்றது. உலக பிதாவான அந்த பராசக்தி தான் தெய்வம். மனிதர்களுக்கு சாபமோட்சம் என்கின்ற ஒரு பெரிய வேலைக்காக அவர் சொந்த குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். பிதாவிற்கும், குமாரனுக்கும் உள்ள இந்த பெரும் ஞானம் தான் நித்திய ஜீவனுக்கு அஸ்திபாரமான சத்தியம். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன், (யோவான் :17:3) என்ற தெய்வ வசனம் இதற்கு சாட்சியாக நிற்கின்றது. குருவாகிய இயேசுவில் இருந்து வந்த இந்த வார்த்தைகளை வளைத்து ஒடிக்காமலும், காற்றில் பறக்கவிடாமலும் இருக்க வேண்டும் அல்லாமல் திரித்துவ வார்த்தை கொண்டு வருகின்றது அறிவின்மை தான்.

மற்ற மத புத்தகங்களைப் பார்க்கின்றப் பொழுது வேதபுத்தகத்திற்குள்ள மகிமை ஏறுகின்ற இந்த ஏக தெய்வ சித்தாந்தத்தை கரி பூசி காட்டுவதற்கு சாத்தான் மிக தந்திரமாக கொண்டுவந்தது தான் சாதாரண புத்திக்கு எட்டாத திரியேக தெய்வ விசுவாசம். படித்தவரும் புத்திசாலிகளுமான சபை மூப்பர்களூம் இந்த விஷயத்தில் அறியாமல் பிசாசினுடைய ஆயுதங்களாக மாறியிருக்கிறார்கள். எளிமையான வேத சத்தியங்களை வெறுத்து யெவனமுனிமார்களுடைய அடிசுவடு பின்பற்றி தத்துவ ஞானமெங்கின்ற பொய்யால் கட்டி உண்டாக்கியது தான் இந்த திரித்துவ விசுவாசம். மனிதர்களுடைய எண்ணங்களும் சிற்ப வேலையும் கொண்டு பொன்னிலும் வெள்ளியிலும் கல்லிலும் செதுக்கி வைத்திருக்கின்ற அன்னிய தேவதை கோலங்களைப் பார்த்து வெட்கப்படுகின்றது வேத சாஸ்திர ப்ண்டிதர்களுடைய விரூப சிருஷ்ட்டியான திரியேக மூர்த்தி விசுவாசம்.

திரியேக தெய்வ மெங்கின்ற கன்றுக்குட்டியினுடைய முன்னில் கிறிஸ்தவ லோகம் சாஷ்ட்டாங்க நமஸ்காரம் நடத்துகிறது. மூன்று ஆளுமைகளுக்குள்ளே ஒராளாயிருக்கின்ற பிதா குமார பரிசுத்தாவி என்ற திரியேக மூர்த்தி போல பயபடத்தக்கதும் ஏதோ ஒரு புத்தியீனன் சொன்னக் கதைப்போல அர்த்தமற்றதும், ஞானசூன்னியமுமான வேறொரு தத்துவம் பழைய தேவதா சங்கல்பங்களில் கூட இல்லை.

பரிசுத்த திரித்துவம் என்ற முத்திரையும் பக்தி வேஷமும் தரித்து பாரம்பரியத்தினுடைய துணையோடும் கூடிய இந்த திருட்டு எண்ணம் உத்தமர்கள் வழி தவறிபோகும் பொழுதும், தெய்வ வசனத்தை விசுவாசித்து, அதை கவுரவப்படுத்துகின்றவர்களுக்கு மவுனம் ஒரு அலங்காரமல்ல எங்கின்ற விசுவாசம் தான் இந்த போஸ்ட்டுகளை எழுதுவதற்குண்டான காரணம். இருட்டில் வழி தவறியலைகின்ற ஒருவருக்காவது வெளிச்சத்தின் இராஜபாதைகுள்ள வழி காட்டியாய் அமையுமென்றால் நாங்கள் வெற்றி பெற்றோம்.

(முடிவுற்றது)

தெய்வம் ஏகரோ? திரியேகரோ? - பாகம் - 4

விசுவாச பிரமாணங்களும் திரித்துவ உபதேசங்களும் :

யேகோவாவினிடையேயும் நமது கர்த்தராகிய இயேசுவினிடையேயும் வித்தியாசமான ஆளுமையையும், இரண்டு பேருக்குமுள்ள பந்தத்தையும் குறித்தும் வேதப் புத்தகத்திலுள்ள சாட்சிகள் சந்தேகமாயிருக்கும் போது திரியேக தெய்வம் எங்கின்ற விஷயத்திற்கும் கிறிஸ்த்தவர்களும்மிடையில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றால் அது மிகவும் ஆச்சரியப்பட தக்கதாயிருக்கிறது. திரியேக தெய்வம் என்றால் ஒரு தெய்வத்தில் மூன்று ஆளுமைகள் அல்லது ஒருவரில் மூன்று தெய்வங்கள். இந்த அறிவு ஒன்றுகொன்று முரன்பாடாயிருக்கிறது, ஒன்றுகொன்று விரோதமாயிருக்கிறது. இந்த பொய்யான அறிவுக்கு கிடைத்திருக்கின்ற அங்கீகாரம் விசுவாசமில்லாத பேர், சபைகளுக்கு உண்டான நித்திரையினாலும், துர் உபதேசங்களாலும் சத்துரு அவனை த்ந்திரமாய் இறுக்கி கட்டி வைத்திருக்கிறது. நமது கர்த்தராகிய இயேசு மகா சக்தி நிறைந்தவர் என்ற நிலையில் ஒரு தெய்வமாக அங்கீகருக்கும் பொழுது, அவர் தான் பிதாவும் சிருஷ்ட்டிகர்த்தரும் எங்கின்ற வேத புத்தகத்தின் பொய் உபதேசங்களை அல்லது விபரீத உபதேசங்களை நாங்கள் எதிர்க்கிறோம். இதை நாங்கள் உதறிதள்ளுகிறோம், கண்டனம் செய்கிறோம்.

திரித்துவத்தை குறித்துள்ள விசுவாச பிரமாணம் (விசுவாச அறிக்கை) மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. கிறிஸ்துவிற்கு பிதாவோடுள்ள பந்தத்தைக் குறித்து முதல் அடி எடுத்து வைத்தது கி.பி.230ல் தான். பிதாவும் குமாரனும் ஒன்று என்ற தத்துவம் கி.பி.325ல் நிக்கியாசுன்னகதோஸ் அனுமதி கொடுக்கவில்லை. கி.பி.381ல் கூச்தந்தீனோபோலீச் முதல் சுன்னகதோசினுடைய காலம் வரை இந்த திரியேக தத்துவம் பூரணாமாய் வளரவேயில்லை. ஏகரும்(ஒருவர்) பரம சத்திய சொரூபருமான யேகோவாவை ஆராதிப்பதற்கு எப்போதும் எதிர்கின்ற (மத்தேயு :4:10) பிசாசு, ஜாதிகளுடைய திரித்துவ விசுவாசத்தை கிறிஸ்த்துவ சபையைக்கொண்டு அங்கீகரிப்பதில் கடைசியாக வெற்றியடைந்துவிட்டது.

அனைத்து மதங்களுடைய பொதுவான சுபாவம் அனேக தெய்வங்களில் விசுவாசம் வைப்பது தான். சர்வாதிகாரிகளான மூன்று தெய்வங்கள், மூன்றும் சேர்ந்து ஏக தெய்வம் (ஒரு தெய்வம்) என்பது அனேக தெய்வ மதங்களுடைய அஸ்திபாரமான தத்துவம் தான். இதேப்போல பாரதத்திலுள்ளவருடைய திரிமூர்த்திகள் தான் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன். பாபிலோணிலும், அசிரியாவிலும் எனோச், இல்லினோச், ஏயோச் என்ற மூன்று தெய்வங்களுண்டு. பினீஷியாவில், உலோமச், உளலோசுரோஸ், ஏலியூல் எங்கின்ற திரிமூர்த்திகள். இவைகள் எகிப்தில் நேப், தாஸ், ஓஸிரிஸ் என்று அழைக்கப்படுகின்றன. கிரீஸில் சியூச், போசிடோள். அயிடோனியச் என்றும் ரோமில் ஜூப்பிட்டர், நெப்டியூன், ப்ளூட்டோ என்ற மூன்று தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன. கெல்டிக் ஜனங்களுக்கிடையில் இவைகள் முறையே கிரியோசின், பயோசேன, சிவன் என்றும், ஜெர்மன் ஜனங்களுக்கிடையில் தோர், வஓடார், ப்ரிக்கோ என்றும் அறியப்படுகிறது. மெக்சிக்கோவில் முன்பு வாழ்ந்தவர்கள் சூரிய தேவனை மூன்று சொரூபங்களில் வைத்து ஆராதித்தனர். அவை பிதா, சூரியன், குமார சூரியன் என்று அழைக்கப்பட்டன. அவர்களுடைய மகா சொரூபங்களில் ஒன்றுக்கு தங்கலங்கா என்ற நாமம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரில் மூன்று ஆளுமைகள். மூன்று ஆளுமைகளில் ஒருவர் என்ற பொருள் இதற்குண்டு. மூல தெய்வத்தில் இருந்து உருவெடுத்த இந்த மூன்று தெய்வங்களுக்கு திரிநாமக என்ற நாமம் அவர்கள் வழங்கினார்கள்.

பலதரப்பட்ட மத உபதேசக்காரருக்கு ஒப்பாக பல கிறிஸ்தவ மதாசாரிர்களும் சாத்தானுடைய சதி திட்டத்தில் விழுந்து பல தெய்வ விசுவாசமும், ஏக தெய்வத்தில் மூன்றாளுமைகள் என்று ஏற்றுக்கொண்டார்கள். எப்படியானாலும் யுக்தி வேறுபாடுகளுடைய காரியத்தில் அன்னிய ஜாதிகளைப் போலும் புறம் தள்ளுகிறது இந்த கிறிஸ்தவர்களுடைய திரியேக தேவ சாஸ்த்திரம்.

ஏனென்றால் தெய்வத்தில் பிதா, குமாரன், பரிசுத்தாஅவி எங்கின்ற மூன்று ஆளுமைகளும் ஒரே ஒரு தெய்வம் தான். இதனுடைய பொருள் பார்க்கும் பொழுது ஒன்று தான், வல்லமையிலும் மகிமையிலும் துல்லியரும் என்றது தான் திருத்துவ வரையறை. மற்ற மதங்களைப் போலேயுள்ள இந்த கள்ள நாணயத்த்தினுடைய மறுபக்கத்தில் பிற ஜாதிகளுடைய ஆராதனை மூர்த்தியான மகா தேவியுடைய இடத்தில் இயேசுவினுடைய மாதாவை நியமித்திருக்கிறது. திருமூர்த்திகளுக்கு அடுத்து மகாதேவிக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜாதிகளுடைய தேவன்மார்கலளுக்கிடையிலும் தேவிமார்களுக்கிடையிலும் பரிசுத்தவாங்களை நியமித்திருக்கிறது. இப்படியாக தேவன்மாரும் தேவிமாரும் உள்ள கிறிஸ்தவமல்லாத மற்ற மதங்களைப்போல கிறிஸ்தவ மதமும் மாறி, கிறிஸ்தவர் என்ற பேர் மட்டுமுள்ள கிறிஸ்த சபைகளில் கத்தோலிக்க மதத்தில் தேவன்மாரையும், தேவிமாரையும் ஆராதிப்பதிலுள்ள வேர் ஆழமாக ஊன்றிப்போயிருக்கிறது. ஆகையால் கத்தோலிக்க மதத்திற்கு பல தெய்வ மதங்களுடைய வரிசையில் இடம் கொடுக்கலாம். ப்ரொட்டஸ்டான்ட் (Protestants)- ல் முக்கால் பிரிவுகளும் அனுசரித்துவருகின்ற திரித்துவ விசுவாசம் கத்தோலிக்க மதத்திலிருந்து வந்தது தான்.

(தொடரும்)

Monday, August 22, 2011

தெய்வம் ஒருவரோ? திரியேகரோ? (மூன்றாம் பாகம்)

சர்வ வல்லமையுள்ள தெய்வம் தான் யெகோவா.

தெய்வம் என்ற வார்த்தையைப் போல யெகோவா என்ற வார்த்தை ஒரு சாதாரணமான நாமமல்ல. சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தெய்வத்திற்கு மட்டுமுள்ள நாமம். வேத புத்தகத்தில் வேறு யாருக்கும் இந்த நாமம் கொடுக்கப்படவில்லை. யெகோவா என்ற இந்த நாமம் மொழிபெயர்க்காமல் அப்படியே அழைக்கவேண்டும். இந்த வார்த்தையை யெகோவா என்றோ யேகோவா என்றோ சொல்லவேண்டும் என்றது JHVH ஆகிய 4 எழுத்துக்களோடு சேர்க்கின்ற மற்ற எழுத்துக்கள் எவ்வளவு, அவைகள் எவைகள்? என்பதைப் பொறுத்திருக்கிறது. பல ஆங்கில மொழிபெயர்ப்புக்களில் யெகோவா என்ற வார்த்தையை கர்த்தர் என்று மொழி பெயர்த்திருப்பதினால் அதனுடைய மகிமை மறைக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து யெகோவா என்ற நாமத்தில் அறியப்படுகிறார் என்ற ஒரு பொய்யான நினைப்பு சிலருக்குண்டு. ஆகையால் இந்த நாமம் சர்வத்திற்கும் ஆதிமூல காரணமாகிய மகா தெய்வமான யெகோவாவுக்கு மட்டுமுள்ளதென்று தொனிக்கின்ற அனேக வேத பகுதிகளை இங்கு காட்டுகிறேன். நான் கர்த்தர், இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரங்களுக்கும் கொடேன் (ஏசாயா:42:8) யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவர் பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் (சங்கீதம்: 83:17).


இயேசு யெகோவா அல்ல என்பதற்கு மற்றோரு விளக்கம் தான் சங்கீதம்:110:1. "கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதப்படியாக்கிப் போடும் வரைக்கும், நீர் என்னுடைய வலது பக்கத்தில் உட்காரும் என்றார். இதை வைத்துப் பார்க்கும் பொழுது யெகோவாவும் ஆண்டவர் என்று சொல்லியிருக்கின்ற இயேசுவும் வித்தியாசமான ஆட்கள். ஆயிரம் ஆண்டு அரசாட்சியின் நாட்களில் இயேசுவை தன்னுடைய வலது பக்கத்தில் உட்கார வைப்பார் என்று யேகோவா வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.(மத்தேயு :22:41-46, எபிரெயர்:1:13, வெளி: 20:4,6, தானி: 7:13,14, 1கொரி:15:25) எல்லா சத்துருக்களையும் தமது பாதத்திற்கு கீழாக்கிப்போடும் வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.

ஏசாயா 6:1,3,5,8,11,12 இந்த வாக்கியங்களில் யேகோவாவையும் இயேசுவையும் இரண்டு ஆட்கள் என்று சொல்லியிருக்கிறது. ஏசாயா:1,8,11 ஆகிய இந்த வாக்கியங்களில் வருகின்ற அதோனாய் என்ற எபிரேய சொல், இயேசுவைக் குறிக்கிறது. அதுபோல 3,5,12 ஆகிய இந்த வாக்கியங்களில் யேகோவா அல்லது JHVH எனப்படுகின்ற நான்கு எழுத்துக்கள்தான் எபிரேய மொழியில் உள்ளது. ஆங்கிலத்தில் அதோனாய், யேகோவா என்ற இரண்டு சொற்களும் கர்த்தர் என்று வரையறுத்து மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் என்ற சொல்லுக்கு ஆங்கில சொல்லான லார்டு ("Lord") பயன்படுத்தவேண்டும். அதோனாய், யேகோவா இவைகளுக்கிடையிலுள்ள வேறுபாட்டினை காட்டுவதற்காக அதோனாய் என்ற சொல்லினுடைய மொழிபெயர்ப்பில் "Lord" என்ற சொல்லில் முதலில் மட்டும் பெரிய எழுத்து பயன்படுத்தப்படுகிறது. அடுத்த சொல்லில் முதலிலும் முடிவிலும் பெரிய எழுத்துக்களையே தான் பயன்படுத்தவேண்டும் (i.e."LORD"). 'யார் நமது காரியமாய் போவான்' என்ற 8-வது வாக்கியத்தில், 'நமது' என்ற வார்த்தையில் யேகோவாவும் இயேசுவும் உள்ளடங்கியிருக்கிறார்கள். யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய் போவார்? - என்ற கேள்வி இயேசுவினுடையது தான். ஏசாய 6-வது அதிகாரத்தில் யேகோவாவை JHVH ஆகிய எழுத்துக்களை கொண்டும், இயேசுவினை அதோனாய் என்ற சொல் கொண்டும் சொல்லியிருப்பதினால், இயேசு யெகோவா அல்ல என்று நன்றாக தெரிகிறது. இயேசு யேகோவாவினுடைய செயலாளர் தான். மல்கியா :3:1, யோசுவா 5:14 போன்ற அனேக வேத பகுதிகள் இதற்கு சான்றாக இருக்கிறது.

மற்ற வேத பகுதிகளையும் கூட உங்கள் கவனத்திற்குள் கொண்டு வருகிறேன். இயேசு யேகோவா அல்ல. யேகோவாவினுடைய அடியார். (ஏசாயா:42:1,6,19, 52:13, 53:11) இயேசு யேகோவா அல்ல, யேகோவாவினுடைய அடியார்.(ஏசாயா 53:1) இயேசு யேகோவா அல்ல அவருடைய முதல் பேரானவன் (சங்கீதம் 89:27; 2:7,12) அப்போஸ்தலர் 13:33, எபிரெயர்1:5; 5:5) ஆகிய இந்த வசனங்களை பொருத்திப் பாருங்கள். அங்கே இயேசு யேகோவா அல்ல, யேகோவாவினுடைய தூதன் தான் என்பது விளங்கும். (ஆதியாகமம்:22:11,15, யாத்திராகமம்:3:2, எண்ணாகமம் 22:22, 27,31,34,35, சங்கீதம்:34:7) அவர் யேகோவா அல்ல, யேகோவாவினுடைய மேய்ப்பன். (சகரியா:13:7, நீதி:8:30) இயேசு யேகோவா அல்ல, அவருடைய செல்லப்பிள்ளை.

(தொடரும்)

தெய்வம் ஒருவரோ? திரியேகரோ? (இரண் பாகம்)

தெய்வம் என்ற வார்த்தையினுடைய பயன்பாடு, வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லா தெய்வங்களைப் பற்றி சொல்லுகின்ற பொழுது, பொதுவான நாமமாகவும் பிதாவான ஏக தெய்வத்தைப்பற்றி சொல்லுகின்ற பொழுது முக்கியமான குறிப்பிட்ட நாமமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. உபாகமம்:6:4-ல் சொல்லப்பட்டிருக்கின்ற ஒரே தேவனாகிய கர்த்தர் தான் இங்கே சொல்லுகின்ற பிதாவான தெய்வம்,"இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே". (உபா:6:4) இஸ்ரவேலே கேள், நம்முடைய கர்த்தர் தெய்வமாகிய கர்த்தர் ஒருவர் என்றும், அல்லது கர்த்தர் நம்முடைய தெய்வம் என்றும் விவரிக்கலாம்.

தெய்வம் என்ற வார்த்தைக்கு சக்திமான் அல்லது வல்லமையுள்ளவர் என்று பொருள். ஆனால் எல்லா நேரங்களிலும் சர்வ வல்லவர் அல்லது யெகோவா (கர்த்தர்) என்றல்ல இங்கே சொல்லப்படுகிறது. ஏல், ஏலாக், ஏலோக, ஏலோகிம் என்று நான்கு எபிரேய வார்த்தைகளுடைய மொழிபெயர்ப்பு தான் தெய்வம் என்ற வார்த்தை. எல்லா வார்த்தைகளுக்கும் வல்லமை, பெரிது என்று பொருள். இது ஒரு சாதாரணமான நாமம். கர்த்தராகிய இயேசுவினையும் பிதாவான தெய்வத்தையும் இந்த சத்தத்தினல் விவரிக்காலாம். இதில் தப்பொன்றுமில்லை. தேவதூதர்களையும் மனிதரில் சக்தியுள்ளவர்களையும் இந்த சத்தத்தினல் விவரிக்கிறார்கள்.

உபாகமம்:10:17-ல் ஏலோகிம் என்ற வார்த்தை சர்வ வல்லவரான யெகோவாவான தெய்வத்தையும், மற்ற தெய்வங்களையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் தேவனாகிய [(ஏலோகிம்) கர்த்தர் தேவாதிதேவன் {தெய்வங்களுடைய (ஏலோகிம்) தெய்வம் (ஏலோகிம்).] ஏலோகிம் என்ற வார்த்தைக்கு ஒருமையிலும், பன்மையிலும் அதற்குபொருள் உண்டு. ஆதியாகமம் :32:30- லும் நியாதிபதிகள்:13:22-லும் தெய்வத்தினுடைய தூது கொடுப்பவர் என்ற நிலையில் ஒரு தூதனை(ஓராள்) ஏலோகிம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யாத்திராகமம்:7:1-ல் மோசேயை ஏலோகிம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாடு எழுத்தாளர்கள் ஏலோகிம் என்ற பன்மையோடு ஒருமையையும் சேர்த்து சிறப்பித்திருக்கிறார்கள். எகிப்து தேவர்களின் மேல் நீதியை செலுத்துவேன் என்ற வசனத்தில் (யாத்திராகமம்:12:12) தேவர்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஏலோகிம் என்ற வார்த்தையில்தான், இந்த இடத்தில் பிரபுக்கள் என்ற பொருள் பொருத்தமாயிருக்கிறது. யத்திராகமம்:21:6, 22:8,9,28 ஆகிய இந்த வசனங்களில் உள்ள நியாதிபதிகளும் "ஏலோகிம்" தான். இதற்கு காரணம் மோசேவினால் நியமிக்கப்பட்ட இந்த நியாதிபதிகள் உத்தியோக பதவி காரணத்தினால் பலவான் களாக மாறினார்கள். ஆதியாகமம்:3:5-லும் கிட்டத்தட்ட 200 இடங்களிலும் ஆவிக்குரிய நிலையில் தேவதூதர்களையும் ஏலோகிம் என்று சிறப்பித்திருக்கிறார்கள்.

ஏலோகிம் (தெய்வம்) என்ற வார்த்தை வித்தியாசமான பொருள் பயன்பாட்டிற்கு சிறந்ததாக காணப்படுகிறது தெளிவு தான். சங்கீதம் 82:1-ல் 'தெய்வம் (ஏலோகிம்) தேவர்களுடைய (ஏல்) சபையில் எழுந்தருளியிருக்கிறது தேவர்களின் (ஏலோகிம்) நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். இங்கே தெய்வம் (ஏலோகிம்) என்ற ஆதி வார்த்தை பூரணமாகவும் சர்வ வல்லவருமான யெகோவானவரை குறிக்கிறது. அதன் பின் வருகின்ற ஏல், ஏலோகிம் (தேவர்கள்) ஆகிய இந்த வார்த்தைகள், வல்லமையுள்ள மற்ற பிறரை குறிக்கிறது. கிறிஸ்து தலைமையாயிருக்கின்ற சுவிசேஷ சபையினுடைய அங்கத்தினர்களாகிய தேவ பிள்ளைகளை குறிப்பிடுகிறது. நீங்கள் தேவர்கள்(ஏலோகிம்) என்றும் நீங்கள் அனைவரும் உன்னதமானவருடைய (ஏல்யோல்) குமாரர்கள் என்றும் நான் சொன்னேன், என்றது அவரைக்குறித்துதான்.

வல்லமையுள்ள மற்ற எல்லொரைக்காட்டிலும் சர்வ வல்லமையுள்ளவர்தான் பரலோக பிதாவானவர். எல்லோரிலும் மகா உன்னதமான பரம்பொருளானவர். எல்லா ஆசீர்வாதங்களும், கிருபைகளும் அவரில் இருந்து மட்டும் தான் கிடைக்கிறது. "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனுமில்லையே" (மாற்கு: 10:18) இயேசுவினுடைய இந்த வார்த்தைகளில் இதே பொருள் தான் உட்கொண்டிருக்கிறது. அனைத்து நன்மைகளிலும் உன்னத இடம் யெகோவா மட்டும் தான் என்றும் இயேசுவில் உள்ள நன்மைகள் அனைத்தும் (அவர் பூரணமான நன்மை நிறைந்தவர்) படைக்கும் கர்த்தாவாகிய பிதாவில் இருந்து கிடைத்தது என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
(தொடரும்)