"வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அனேக தேவர்களும் அனேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்த்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." (1கொரி:8:5,6)
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த விஷயத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். சகலத்திற்கும் காரணர் பிதாவான யெகோவா மட்டும் தான். அவர் தான் சருவத்திற்கும் ஆதி காரணர். அதுவுமல்லாமல் எல்லாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு முகாந்திரமோ அவர் வழியாகவோ ஆகிறது. தேவனுடைய சிருஷ்ட்டிக்கு ஆதியுமாயிருக்கிற (வெளி:3.14) இயேசு முகாந்திரம் தான் அதற்கு பிந்தியுள்ள எல்லா கிரியைகளூம் நடத்தப்பட்டிருக்கிறது. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவா.1:13) அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுவரூபமும், சர்வ சிருஷ்ட்டிக்கும் முந்தின பேறுமானவர். அவருக்குள் சகலமும் சிருஷ்ட்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகலமும் அவரைக்கொண்டும் அவருகென்று, சிருஷ்ட்டிக்கப்பட்டது.(கொலோ:1:15-17) எல்லாருக்கும் ஓரே தேவனும், பிதவும் உண்டு. அவர் எல்லார்மேலும் எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் (எபேசி :4:6)
இயேசுவினுடைய சாட்சியும் இதற்கு ஒப்பாயிருக்கிறது. நான் பிதாவல்ல, பிதாவினுடைய சித்தம் நிறைவேற்றுகின்ற அவருடைய கீழ்ப்படிதலுள்ள குமாரன் என்று இயேசு சொன்னார்.(யோவா:9:35-37,10:36-39). நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது(யோவா:5:19,3;6:38;4:34). நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று அவர் சொல்லியிருக்கிறார் என்றது சரிதான். ஆனால் எந்த விதத்தில் அவர் ஒன்றாயிருக்கிறோம் என்றும், அதே போல அவருடைய சீஷர்களும் ஒன்றாயிருக்கவேண்டுமென்றும் அவருடைய ஜெபத்தில் விளக்கியிருக்கிறார் (யோவா:10:30,17:11). ஒரே மனதும், இதயமும், லட்ச்சியமும் உண்டாயிருக்கும்போதுதான் ஐக்கியம் வருகிறது. கணவன் மனைவி இவர்களுடைய இதயங்கள் உறவில் ஒன்று சேருகின்றது போலுள்ள ஒரு நிலைக்கு இது துல்லியமாயிருக்கிறது. இப்படி இந்த இணைகள் ஒன்றாய் மாறுகிறது, ஆனால் ஓரே ஆள் அல்ல.
இயேசு கற்றுதந்ததற்கு நேர் எதிராக பிதாவும் குமாரனும் எல்லா விதத்திலும் துல்லியதையுள்ள ஒரே ஆள் தான் என்று விசுவாசிப்பதினால் தங்கள் குருவிற்கு அதிக மதிப்பு கொடுக்கிறோம் என்று சிலர் நினைக்கிறது போல தோன்றுகிறது. ஆனால் இயேசு இவ்வாறு சொல்கிறார்,"என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்" என்று (யோவார்:14:28). அப்போஸ்தலனகிய பவுல் சொல்கிறார், "கிறிஸ்த்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்", (யோவா:11:3) " குமாரன் தாமும் தமக்குச் சகலத்தேயும், கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார் என்று (1கொரி:15:28) தெய்வத்தினுடைய பரமாதிகாரத்திற்கு எதிரில்லாத தெளிவுதான் பிலி2:6ல் சொல்லியிருந்தும், இங்கே "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளயாடின பொருளாக எண்ணவில்லை". அதாவது இயேசுதெய்வத்தோடு சமமாயிருக்கிறார் என்று சாதிக்கவோ, தெய்வத்தினுடைய சர்வாதிகாரத்தில் பிரவேசிப்பதற்கு வழி தேடவோ செய்யவில்லை என்று பொருள். இந்த பிரகாரமுள்ள அதிமோகவும், உரிமை வாதமும், அதற்காயுள்ள நீக்கங்களூம் சாத்தானில் நின்று தான் உண்டாயிருக்கிறது(ஏசாயா:14:!2-14) ' நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன் என்றும் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் சாத்தான் சொன்னான்.
இயேசு சொன்னார், நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான்". (யோவா:13:13). பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்: என்றும் இயேசு சொன்னார்(மத்தே:23:9). உயித்தெழுந்ததற்க்கப்புறமும் இயேசு, தெய்வத்தை அவருடைய பிதாவும் நம்முடைய பிதாவும் என்று விசேஷமாக சொன்னார். நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்றும் இயேசு சொன்னார்(யோவா 20:17). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவின் பிதாவாகிய தேவன் கிறிஸ்த்துவில் நம்மை மறுபடியும் ஜெனிப்பித்தார் (1 பேதுரு1:3-5).
நித்தியரான தெய்வமும் பிதாவுமானவர் ஒருவர் மட்டும்தான் உண்டு என்று மிக தெளிவாக போதிக்கிறது. அவர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும், ஸ்தோத்தரிக்கப்படதக்கவர்(சங்கீ 41:13, 90:2, 106:48, ரோமர் 16:24,26) பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனும் ஒருவர் மட்டும்தான் (யோவா1:18, 3:16) தேவனுடைய சிருஷ்ட்டிக்கு ஆதியுமாயிருக்கிறவரும், தேவனுடைய தற்சுவரூபம், சர்வ சிருஷ்ட்டிக்கும் முந்தின பேறுமாயிருக்கிறவருமாகிறார்(சங்கீ2:7, 89:27, கொலோ 1:15) அவர் மாம்சமானார் (யோவா 1:14, ரோமர்:1:15) அவர் மனுஷரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக அவரை உயத்தினார்(பிலி 2:8,9). பிதாவு ஜீவன் கொடுகிறவரும் குமாரன் ஜீவன் பெற்றுக் கொள்கிறவரும் ஆகிறார்கள் என்ற ஒரு காரியம் நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பிதாவு என்ற நிலமையில், யெகோவா (கர்த்தர்) தம்முடைய ஒரே பேறான குமாரனுக்கு ஜீவன் கொடுத்திருக்கிறார். இயேசு, குமாரன் என்ற நிலமையில் பிதாவில் நின்றும் ஜீவன் பெற்றிருக்கிறார்.
(தொடரும்)
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த விஷயத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். சகலத்திற்கும் காரணர் பிதாவான யெகோவா மட்டும் தான். அவர் தான் சருவத்திற்கும் ஆதி காரணர். அதுவுமல்லாமல் எல்லாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு முகாந்திரமோ அவர் வழியாகவோ ஆகிறது. தேவனுடைய சிருஷ்ட்டிக்கு ஆதியுமாயிருக்கிற (வெளி:3.14) இயேசு முகாந்திரம் தான் அதற்கு பிந்தியுள்ள எல்லா கிரியைகளூம் நடத்தப்பட்டிருக்கிறது. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவா.1:13) அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுவரூபமும், சர்வ சிருஷ்ட்டிக்கும் முந்தின பேறுமானவர். அவருக்குள் சகலமும் சிருஷ்ட்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகலமும் அவரைக்கொண்டும் அவருகென்று, சிருஷ்ட்டிக்கப்பட்டது.(கொலோ:1:15-17) எல்லாருக்கும் ஓரே தேவனும், பிதவும் உண்டு. அவர் எல்லார்மேலும் எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் (எபேசி :4:6)
இயேசுவினுடைய சாட்சியும் இதற்கு ஒப்பாயிருக்கிறது. நான் பிதாவல்ல, பிதாவினுடைய சித்தம் நிறைவேற்றுகின்ற அவருடைய கீழ்ப்படிதலுள்ள குமாரன் என்று இயேசு சொன்னார்.(யோவா:9:35-37,10:36-39). நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது(யோவா:5:19,3;6:38;4:34). நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று அவர் சொல்லியிருக்கிறார் என்றது சரிதான். ஆனால் எந்த விதத்தில் அவர் ஒன்றாயிருக்கிறோம் என்றும், அதே போல அவருடைய சீஷர்களும் ஒன்றாயிருக்கவேண்டுமென்றும் அவருடைய ஜெபத்தில் விளக்கியிருக்கிறார் (யோவா:10:30,17:11). ஒரே மனதும், இதயமும், லட்ச்சியமும் உண்டாயிருக்கும்போதுதான் ஐக்கியம் வருகிறது. கணவன் மனைவி இவர்களுடைய இதயங்கள் உறவில் ஒன்று சேருகின்றது போலுள்ள ஒரு நிலைக்கு இது துல்லியமாயிருக்கிறது. இப்படி இந்த இணைகள் ஒன்றாய் மாறுகிறது, ஆனால் ஓரே ஆள் அல்ல.
இயேசு கற்றுதந்ததற்கு நேர் எதிராக பிதாவும் குமாரனும் எல்லா விதத்திலும் துல்லியதையுள்ள ஒரே ஆள் தான் என்று விசுவாசிப்பதினால் தங்கள் குருவிற்கு அதிக மதிப்பு கொடுக்கிறோம் என்று சிலர் நினைக்கிறது போல தோன்றுகிறது. ஆனால் இயேசு இவ்வாறு சொல்கிறார்,"என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்" என்று (யோவார்:14:28). அப்போஸ்தலனகிய பவுல் சொல்கிறார், "கிறிஸ்த்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்", (யோவா:11:3) " குமாரன் தாமும் தமக்குச் சகலத்தேயும், கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார் என்று (1கொரி:15:28) தெய்வத்தினுடைய பரமாதிகாரத்திற்கு எதிரில்லாத தெளிவுதான் பிலி2:6ல் சொல்லியிருந்தும், இங்கே "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளயாடின பொருளாக எண்ணவில்லை". அதாவது இயேசுதெய்வத்தோடு சமமாயிருக்கிறார் என்று சாதிக்கவோ, தெய்வத்தினுடைய சர்வாதிகாரத்தில் பிரவேசிப்பதற்கு வழி தேடவோ செய்யவில்லை என்று பொருள். இந்த பிரகாரமுள்ள அதிமோகவும், உரிமை வாதமும், அதற்காயுள்ள நீக்கங்களூம் சாத்தானில் நின்று தான் உண்டாயிருக்கிறது(ஏசாயா:14:!2-14) ' நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன் என்றும் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் சாத்தான் சொன்னான்.
இயேசு சொன்னார், நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான்". (யோவா:13:13). பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்: என்றும் இயேசு சொன்னார்(மத்தே:23:9). உயித்தெழுந்ததற்க்கப்புறமும் இயேசு, தெய்வத்தை அவருடைய பிதாவும் நம்முடைய பிதாவும் என்று விசேஷமாக சொன்னார். நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்றும் இயேசு சொன்னார்(யோவா 20:17). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவின் பிதாவாகிய தேவன் கிறிஸ்த்துவில் நம்மை மறுபடியும் ஜெனிப்பித்தார் (1 பேதுரு1:3-5).
நித்தியரான தெய்வமும் பிதாவுமானவர் ஒருவர் மட்டும்தான் உண்டு என்று மிக தெளிவாக போதிக்கிறது. அவர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும், ஸ்தோத்தரிக்கப்படதக்கவர்(சங்கீ 41:13, 90:2, 106:48, ரோமர் 16:24,26) பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனும் ஒருவர் மட்டும்தான் (யோவா1:18, 3:16) தேவனுடைய சிருஷ்ட்டிக்கு ஆதியுமாயிருக்கிறவரும், தேவனுடைய தற்சுவரூபம், சர்வ சிருஷ்ட்டிக்கும் முந்தின பேறுமாயிருக்கிறவருமாகிறார்(சங்கீ2:7, 89:27, கொலோ 1:15) அவர் மாம்சமானார் (யோவா 1:14, ரோமர்:1:15) அவர் மனுஷரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக அவரை உயத்தினார்(பிலி 2:8,9). பிதாவு ஜீவன் கொடுகிறவரும் குமாரன் ஜீவன் பெற்றுக் கொள்கிறவரும் ஆகிறார்கள் என்ற ஒரு காரியம் நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பிதாவு என்ற நிலமையில், யெகோவா (கர்த்தர்) தம்முடைய ஒரே பேறான குமாரனுக்கு ஜீவன் கொடுத்திருக்கிறார். இயேசு, குமாரன் என்ற நிலமையில் பிதாவில் நின்றும் ஜீவன் பெற்றிருக்கிறார்.
(தொடரும்)
No comments:
Post a Comment